April 29, 2024

சினிமா 50 % , கொண்டாட்டம் 50 %..!! கொட்டும் பனியில் ஜோதிகாவுடன் என்ஜாய் பண்ணும் சூர்யா ..!! வெளிவந்த ரொமான்டிக் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா . கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் தான் இருவரும் முதல்முறையாக ஜோடி சேர்ந்தனர்.  அப்போதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி ,சில்லுனு ஒரு காதல் ,

போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர்.  கிட்டத்தட்ட ஏழு வருடமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் .

மேலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஜோதிகா பின்னர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி  கொடுத்து இருந்தார் . குறிப்பாக ஜோதிகாவின் சினிமா பயணத்திற்கு சூர்யாவும் ஒரு பக்க பலமாக இருந்து வருகிறார் இப்படி இருக்கும் நிலையில் ,

கொட்டும் பனியில் மனைவியுடன் என்ஜாய் பண்ணி இருக்கிறார் சூர்யா . அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் சினிமா 50% , கொண்டாட்டம் 50% என்று கூறி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *