தென்னிந்திய சினிமா உலகில் பிரபல டாப் நடிகையாக கலங்கி கொண்டு வருபவர் நடிகை சமந்தா. தமிழில் வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறினார் . இதன் பிறகு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா .
ஆனால் திருமணமான நான்கு வருடங்களிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் . இதை அடுத்து விவகரத்தான பிறகும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை சமந்தா . இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவை போல சமந்தாவும்,
புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார் . அந்த வகையில் நடிகை நயன்தாராவும் , அவருடைய கணவருமான விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர் . இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல தரமான திரைப்படங்களை,
தயாரித்து உள்ளனர் . அதேபோன்று தற்போது நடிகை சமந்தாவும் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நல்ல நல்ல படங்களை கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார் நடிகை சமந்தா. தற்போது இந்த அறிவிப்பை ,
தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் நடிகை சமந்தா. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் …
View this post on Instagram