நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான் சீமான். இப்போது அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வரும் சீமான் ஒரு கட்டத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சீமான் கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான பாஞ்சாலங்குறிச்சி என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானார் .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துக்கள் போன்ற திரைப்படங்களை இயக்கி இருந்தார் . இதன் பிறகு முழுநேர நடிகராக மாறிவிட்டார் சீமான். அந்த வகையில் தமிழில் வெளியான ஆடும் கூத்து, பள்ளிக்கூடம் ,மாயாண்டி குடும்பத்தார்,
மகிழ்ச்சி ,நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ, ட்ராபிக் ராமசாமி ,தவம் ,முந்திரி காடு போன்ற பல திரைப்படங்களில் முக்கிய இடத்தில் நடித்திருந்தார் சீமான் . இதை அடுத்து அரசியலில் தீவிரம் காட்டி வரும் சீமான் மீண்டும் சினிமாவிற்குள் வர இருக்கிறாராம்.
அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் எல்ஐசி என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்க உள்ளாராம் சீமான். இந்த படத்தில் சீமான் இயற்கை விவசாயம் செய்யும் ஒரு நபராக நடிக்க உள்ளாராம்.
ஆனால் அவருக்கு எதிராக பிரதீப் ரங்கநாதன் செயற்கை விவசாயத்தை விரும்புவதாக நடிக்க உள்ளாராம் . இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் மோதல்கள் சுவாரசியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காகத்தான் சீமான் சேவிங் செய்யாமல் தாடியுடன் சுற்றி வருகிறாராம்…