ஓவியா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . மலையாள படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான நாளை நமதே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தான். இந்த திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது ,
என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், யாமிருக்க பயமேன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை ஓவியா .
இதன் பிறகு பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியிடராக கலந்து கொண்டும் பெரிய அளவில் பிரபலமானார் ஓவியா . இதன் பின்னர் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர் . ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடித்த எந்த படங்களும் ,
பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இப்படி இருக்கும் நிலையில் 32 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் ஓவியா இது குறித்து கூறியதாவது, நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இன்னொருவர் வேண்டும் என்று நினைக்கவில்லை.
இப்போதும் நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் . திருமணம் என்பது அதற்கான நேரத்தில் அமைய வேண்டும், நாம் அதன் பின்னால் போக கூடாது. அது வந்தால் ஓகே, மேலும் நான் தனியாக இருப்பதை தான் விரும்புகிறேன் என்றும் கூறியிருந்தார் நடிகை ஓவியா…