பிரபுதேவா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் , இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . இவர் பெரிய அளவில் பிரபலமானதற்கு காரணமே அவருடைய தனித்துவமான நடனம் தான். அப்படி இந்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரபுதேவா இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது ரமலத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா .
இதன்பிறகு நயன்தாரா மீது காதல் வயப்பட்டார் பிரபு தேவா . இப்படி இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் திடீரென இருவரும் பிரிந்து விட்டனர் . இதன்பிறகு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா . இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவை விட ,
நான் பிரபுதேவாவை உருகி உருகி காதலித்து உள்ளேன் என்று கூறியுள் ளார் பிரபல நடிகை ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகை வனிதா தான். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வனிதா கூறியதாவது , நான் பிரபுதேவாவை உயிருக்கு உயிராக காதலித்தேன். அதுவும் அவருடைய காதலன் படம்,
வந்தபோது அவருடைய புகைப்படங்களை எல்லாம் நான் சேர்த்து வைத்தேன் . அது மட்டுமில்லாமல் என்னை நானே நக்மாவாக நினைத்துக் கொண்டு கனவில் அவருடன் டூயட் கூட பாடி இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இதையெல்லாம் தெரிந்து கொண்ட விஜயகுமார் ஒருமுறை பிரபுதேவாவை தன்னுடைய வீட்டுக்கு,
அழைத்து வந்தாராம் . அப்போது பிரபுதேவாவுக்காக விதவிதமாக பல அசைவ உணவுகளை சமைத்து வைத்திருந்தாராம் நடிகை வனிதா . ஆனால் பிரபுதேவா அசைவம் சாப்பிட மாட்டேன் என்று கூறிவிட்டாராம் . இதனால் அவருக்காக வெஜிடேரியன் ஆகவே மாறினாராம் நடிகை வனிதா…