விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ஜோடி. இவர்கள் இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமத்து பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தனர் . குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது . மேலும் செந்தில் கணேஷ் ,
சீமராஜா, விஸ்வாசம், காப்பான், பட்டாஸ், சூரரைப் போற்று போன்ற பல படங்களில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் . இவரை போல ராஜலட்சுமியும் , சார்லி சாப்ளின் 2 , புஷ்பா ,தெய்வ மச்சான் மற்றும் சாமி பாடல்களையும் பாடியிருக்கிறார் என்பது,
குறிப்பிடத்தக்கது . இதனிடையே திருமணமான இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . அதோடு தற்போது அரண்மனை போல வீடு ஒன்றையும் கட்டி விட்டனர் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி . இந்நிலையில் எப்போதும் வேட்டி சேலையில் பார்த்த செந்தில் கணேஷ் ,
ராஜலட்சுமி தற்போது மாடர்ன் உடையில் மாஸ் காட்டி வருகிறார்கள். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…