ஹன்சிகா மோத்வானி ஒரு பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த ஹன்சிகா 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுடூரு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எங்கேயும் காதல் ,வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 ,அரண்மனை ,ரோமியோ ஜூலியட், புலி போன்ற பல திரைப்படங்களை நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்நடிகை ஹன்சிகா.
மேலும் நடிகை ஹன்சிகா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனிடையே கடந்த வருடம் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா .
மேலும் திருமணத்துக்கு பிறகும் பல திரைப்படங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் பஞ்சாபில் உள்ள தங்கக் கோவிலுக்கு தன்னுடைய கணவருடன் சென்று இருக்கிறார் ஹன்சிகா . அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து ” நன்றி செலுத்துதல் ” என்று பகிர்ந்துள்ளார் …