தற்போதுள்ள பெரும்பாலான நடிகர்கள் இந்த நடிகை என் படத்தில் நடிக்க மாட்டாரா என்று ஏங்கும் அளவிற்கு தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கி கொண்டு வருபவர் தான் நடிகை சாய்பல்லவி. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சாய் பல்லவி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .
இப்படி வெளியான முதல் திரைப்படமே இவரை பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி. இதைத்தொடர்ந்து என் ஜி கே ,
பாவ கதைகள், கார்கி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சாய் பல்லவி . மேலும் நடிகை சாய் பல்லவி தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக கலங்கி கொண்டு வருகிறார் . அதுவும்,
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி . இப்படி இருக்கும் நிலையில் நடிகை சாய் பல்லவியின் தந்தை குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் நடிகை சாய் பல்லவியின் தந்தை பெயர்,
செந்தாமரை கண்ணன் . இவர் மத்திய கலால் அதிகாரியாக இருக்கிறாராம். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவியின் தந்தை இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கிறாரா என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…