April 30, 2024

15 வருடம் கழித்து பாக்யராஜின் மகனுக்கு கிடைத்த அங்கீகாரம் ..!! ஆனந்த கண்ணீரில் பதிவு போட்ட சாந்தனு ..!!

இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன்தான் சாந்தனு . ஆரம்பத்தில் பாக்யராஜ் இயக்கிய படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சாந்தனு கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்தத் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த சித்து பிளஸ் 2 ,கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி,

வாய்மை ,முப்பரிமாணம் போன்ற எந்த படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . குறிப்பாக இவரும் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வந்தார் . அப்போதும் கூட இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை .

இந்நிலையில் நேற்று அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார் . இந்த படத்தில் அசோக் செல்வன் ,சாந்தனு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது.

குறிப்பாக முதல் நாளிலேயே இந்த திரைப்படம் நல்ல வசூலையும் பெற்று இருக்கிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் சாந்தனு. அதில்,கடைசியாக நான் வெற்றியை ருசித்து 15 வருடம் நாலு மாதம் என்று ,

மொத்தம் 5600 நாட்கள் ஆகிவிட்டது. இந்த வெற்றி உங்களால்தான்,  உங்களின் தொடர் ஆதரவு தான் என்னை இத்தனை ஆண்டுகளாக துவளவிடாமல் ஓட வைத்தது ,இதற்காக நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று உருக்கமாக கூறியிருந்தார் நடிகர் சாந்தனு…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *