April 26, 2024

அண்ணனோட முகத்த பார்க்க கொடுத்து வைக்கலையே ..!! கேப்டனின் நினைவிடத்தில் கதறி கதறி அழுத சூர்யா ..!!

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பு பல பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் விஜயகாந்த் என்ற ஒரு மனிதருக்காக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை கதறி கதறி அழுதனர்.  அதற்கு ஒரே காரணம் அவர் செய்த தானமும் , தர்மமும் தான்.  அது மட்டுமல்லாமல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பல பிரபலங்களுக்கு உதவி செய்திருந்தார் விஜயகாந்த்.

அப்படி விஜய்யின் ஆரம்ப காலகட்டங்களில் எப்படி தூக்கி விட்டு அழகு பார்த்தாரோ,  அதேபோல சூர்யாவையும் தூக்கி விட்டு அழகு பார்த்தார் விஜயகாந்த் . அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் தான் பெரியண்ணா . பின்னர் மாயாவி என்ற படத்திலும் ஒன்றாக ,

நடித்திருந்தனர் . அப்போதிலிருந்து இருவருக்கும் இடையே ஒரு அண்ணன் தம்பி போன்ற உறவு இருந்து வந்துள்ளது . இதையடுத்து கேப்டன் விஜயகாந்த் அவர்கள்  இறந்த போது வெளிநாட்டில் இருந்ததால் சூர்யாவால் வர முடியவில்லை. அதனால்  வீடியோ வெளியிட்டு அஞ்சலி செலுத்தி இருந்தார் .

இப்படி இருக்கும் நிலையில் இன்று கேப்டனின் நினைவிடத்திற்கு வந்த சூர்யா அண்ணனோட முகத்தை பார்க்க முடியாதது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கதறி கதறி அழுதுள்ளார் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *