April 30, 2024

மயில் போல பொண்ணு ஒன்னு..!! குயில் போல பேச்சு ஒன்னு..!! அன்பு மகளுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த இளையராஜா ..!!

இளையராஜாவின் மகளும் , பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணியின் திடீர் மரணத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் . ஆரம்பத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்களில் ஹம்மிங் பாடி வந்த பவதாரணி ராசையா என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார் . இதன் பிறகு அலெக்ஸாண்டர் ,மாணிக்கம் ,அரவிந்தன் ,

உல்லாசம்,ராமன் அப்துல்லா ,காதலுக்கு மரியாதை ,நேருக்கு நேர் ,காதலா காதலா ,மனம் விரும்புதே உன்னை ,பூவெல்லாம் கேட்டுப்பார் ,பாரதி ,பிரெண்ட்ஸ் போன்ற பல திரைப்படங்களில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருந்தார் பாடகி பவதாரணி .

குறிப்பாக இவர் பாரதி படத்தில் இடம் பெற்ற “மயில் போல பொண்ணு ஒன்னு” என்ற பாடலை பாடி தேசிய விருதையும் வென்றார் . இப்படி பாடகியாக கலக்கிக்கொண்டு வந்த பவதாரணி ஒரு சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார் .

இந்நிலையில் 47 வயதான பவதாரணி சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் .அதற்காக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரணி நேற்று முன்தினம் திடீரென இறந்து விட்டார் . இவருடைய உடல் இன்று இளையராஜாவின் சொந்த ஊரில்,

அடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இப்படி இருக்கும் நிலையில் அன்பு மகளுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இளையராஜா. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *