தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி கொண்டு வந்த கீர்த்தி சுரேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை .
பின்னர் இந்த படத்திற்குப் பிறகு வெளியான ரஜினி முருகன் ,ரெமோ ,பைரவா ,தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்கள் கீர்த்தி சுரேஷை பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு தான் தவிர்க்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தில் கொடிக்கட்டி,
பறந்து வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் . ஆனால் சமீப காலமாக இவருடைய நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அப்படி இருந்தும் கூட தற்போது சைரன் ,ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா ,கன்னிவெடி என்று நாலு திரைப்படங்களுக்கு,
மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படி இருக்கும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் போஸ்,
கொடுத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதைப் பார்த்த ரசிகர்கள் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் இப்படித்தான் இருந்தாரா.? என்று ஆச்சிரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்…