80 களில் தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகை நளினி. கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான ராணுவ வீரன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை நளினி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உயிருள்ளவரை உஷா, மனைவி சொல்லே மந்திரம் , தங்கைக்கோர் கீதம், நூறாவது நாள் ,நன்றி , 24 மணி நேரம் , பிள்ளை நிலா , பாலைவன ரோஜாக்கள்,
போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை நளினி . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர் . ஆனால் திருமணம் கொஞ்ச வருடங்களிலேயே,
ராமராஜனும் நளினியும் பிரிந்து விட்டனர் . குறிப்பாக திருமணத்துக்கு பிறகு உடல் எடை அதிகரித்து ஆளே மாறிப் போனார் நடிகை நளினி . இதனால் இவருக்கு வந்ததெல்லாம் அம்மா கதாபாத்திரமும், துணை கதாபாத்திரமும் தான். ஆனால் நடிகை நளினி குண்டானதற்கு,
காரணமே அந்த ஊசி தானாம். அந்த வகையில் கல்யாணமான பிறகு உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நடிகை நளினி அதற்காக ஊசி போட்டு தான் உடல் எடையை அதிகரித்தாராம். அப்படி நடிகையாக இருக்கும் போது உணவில் கட்டுப்பாடோடு,
இருந்து வந்த நடிகை நளினியிடம் அவருடைய மகன் அம்மாவான பிறகு எதுக்கு கட்டுப்பாடோடு இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். இதன் பிறகுதான் நடிகை நளினி உடல் எடையை அதிகரித்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…