தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான காமெடி நடிகராக இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் . ஆரம்ப காலகட்டங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலுவுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர் நடிகர் ராஜ்கிரண் தான் . அதன் பிறகு அவரை தூக்கி விட்டு அழகு பார்த்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். ஆனால் அந்த நன்றி கொஞ்சம் கூட வடிவேலுக்கு இல்லை,
என்று தான் சொல்ல வேண்டும். மேலும் கேப்டன் இருக்கும்போதே அவரைப் பற்றி தவறாக பேசி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியிருந்தார் வடிவேலு. இதை அடுத்து அவர் இறந்தபோது அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை வடிவேலு. என்னதான் எதிரியாக இருந்தாலும் ,
அவருடைய இறப்பிற்கு செல்வதுதான் தமிழரின் வழக்கம் . ஆனால் அதை வடிவேலு செய்யவில்லை . ஆனால் வடிவேலு விஜயகாந்தின் மரண செய்தியை கேட்டு கதறி கதறி அழுதார் என்று அவருடைய நண்பர் கூறியிருந்தார் . இதை யாருமே நம்பவில்லை .
இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்தின் இறப்பிற்கு வராத வடிவேலு தற்போது கலைஞர் 100க்கு சென்று கலைஞருக்கு ஜால்ரா அடித்திருக்கிறார் . அந்த வகையில் நேற்று கலைஞர் 100 பிரம்மாண்டமாக நடைபெற்றது . இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த ,
எல்லா பிரபலங்களும் கலந்து கொண்டனர் . அதில் வடிவேலும் கலந்து கொண்டு கலைஞரின் பெருமையை பேசி இருந்தார் . இதைப் பார்த்த ரசிகர்கள் நீ எல்லாம் ஒரு மனுசனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…