வைகைப்புயல் வடிவேலு ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . ஆரம்ப காலகட்டங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். இன்னும் சொல்லப் போனால் அப்போது இவர் இல்லாத படங்களை கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வந்தார் வடிவேலு.
என்னதான் தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும் வடிவேலுவின் உண்மையான குணம் பலரையும் கலங்க வைத்திருக்கிறது . இன்னும் சொல்லப்போனால் வடிவேலு ஒரு சுயநலவாதி என்று அவருடன் நடித்த பல நடிகர்கள் கூறி வருகின்றனர்.
அதோடு கேப்டனை தவறாக பேசி பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . இதை அடுத்து மாமன்னன் படத்தில் தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார் .
இதை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளாராம் வடிவேலு . இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் . இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி தயாரிக்கிறார். இந்தப் படத்தில் வடிவேலுக்கு,
ஜோடியாக நடிகை சித்தாரா நடிக்க உள்ளாராம் . இவர் தமிழில் வெளியான புது வசந்தம், நட்புக்காக ,படையப்பா ,முகவரி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இதோ அந்தப் படத்தின் போஸ்டரை நீங்களும் பாருங்க…