பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அப்படி இந்த சீசனில் வத்திக்குச்சி வனிதாவின் மகளான ஜோவிகாவும் போட்டியாளராக கலந்து கொண்டார் . ஆனால் வனிதா 8 பாய்ந்தால் இவர் 16 அடி பாய்வது தான் ஆச்சிரியமே . அந்த வகையில் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த பிறகு எனக்கு படிப்பு வரவில்லை,
அதனால் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்தவுடன் வீட்டிலேயே தான் இருந்து வருகிறேன் என்று கூறியிருந்தார்ஜோவிகா . இதன் பிறகு சக போட்டியாளரான விசித்ரா நீ எப்படியாவது 12ஆம் வகுப்பை முடி என்று தன்னுடைய கருத்தை கூறியிருந்தார். ஆனால் இதுதான் ,
தற்போது பிக் பாஸ் வீட்டில் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேட்டதும் கொந்தளித்த ஜோவிகா இதை கேட்க நீ யார்.? கஷ்டப்பட்டு தான் படித்தேன் , என்னால் முடியவில்லை , படித்தால் தான் சாதிக்க முடியும் என்ற சட்டம் கிடையாது என்று பத்ரகாளி போல,
ஆடி இருந்தார் ஜோவிகா . ஒரு பக்கம் ஜோவிகா சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டாலும் , மறுபக்கம் விசித்ரா சொன்ன கருத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் . காரணம் விசித்ரா அவரை படிக்க சொல்லியதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் இதை பக்குவமாக புரிந்து,
கொள்ளாமல் தன்னுடைய பக்கம் தான் நியாயம் உள்ளது என்று கொந்தளித்து இருக்கிறார் ஜோவிகா. இதைப் பார்த்த ரசிகர்கள் நூலை போல சேலை தாயைப் போல பிள்ளை என்று கூறி வருகின்றனர்…