மறைந்த பவதாரணி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இசைஞானி இளையராஜாவின் இரண்டாவது வாரிசான பவதாரணி ராசையா என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார் . இதன் பிறகு பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை தன்னுடைய குரலால் மயக்கி வைத்திருந்தார் பவதாரணி .
இப்படி இருந்த நிலையில் அண்மைக்காலமாக எந்த ஒரு பாடலும் பாடாமல் இருந்து வந்த பவதாரணி நேற்று இலங்கையில் திடீரென இறந்து விட்டார் . இந்நிலையில் பவதாரணி கடைசியாக பாடிய பாடல் சிம்புவுக்கு தானாம் . அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில்,
யுவன் இசையில் வெளியான “மெஹெரெசிலா” என்ற பாடலை தான் கடைசியாக பாடியிருக்கிறார் பவதாரணி . தற்போது அந்த வீடியோவை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் சிம்பு . இதோ அந்த பதிவை நீங்களும் பாருங்க…
The voice that forever lives in the heart of people for its innocence and love! You were a pure soul! Gone too soon! I pray to God to give strength to the family of Illayaraja sir and my brother @thisisysr at this moment! Rest in peace Bhavatharini. 💔#Bhavatharini #RIP pic.twitter.com/PO3ArYGq49
— Silambarasan TR (@SilambarasanTR_) January 25, 2024