April 28, 2024

கடைசியாக சிம்புவுக்காக ஒலித்த பவதாரணியின் குரல் ..!! இறப்பு செய்தியை கேட்டு கண்கலங்கிய சிம்பு ..!! வைரலாகும் பதிவு ..!!

மறைந்த பவதாரணி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஆவார்.  இசைஞானி இளையராஜாவின் இரண்டாவது வாரிசான பவதாரணி ராசையா என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கினார் . இதன் பிறகு பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை தன்னுடைய குரலால் மயக்கி வைத்திருந்தார் பவதாரணி .

இப்படி இருந்த நிலையில் அண்மைக்காலமாக எந்த ஒரு பாடலும் பாடாமல் இருந்து வந்த பவதாரணி நேற்று இலங்கையில் திடீரென இறந்து விட்டார் . இந்நிலையில் பவதாரணி கடைசியாக பாடிய பாடல் சிம்புவுக்கு  தானாம் . அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில்,

யுவன் இசையில் வெளியான “மெஹெரெசிலா” என்ற பாடலை தான் கடைசியாக பாடியிருக்கிறார் பவதாரணி . தற்போது அந்த வீடியோவை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் சிம்பு . இதோ அந்த பதிவை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *