பாலிவுட் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் நடிகர் சைப் அலிகான் . கடந்த 1993 ஆம் ஆண்டிலிருந்து தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கிய சைப் அலிகான் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளியான பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதி புரூஷ் என்ற படத்திலும் நடித்திருந்தார் நடிகர் சைப் அலிகான்.
இதனிடையே கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் சைப் அலிகான். இந்நிலையில் ஹிந்தி சினிமா உலகில் 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வரும் நடிகர் சைப் அலிகான் 800 கோடி மதிப்பில் அரண்மனை போல வீடு வைத்திருக்கிறார்,
என்பது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்து வந்த நடிகர் சைப் அலிகான் தன்னுடைய ஆசைப்படியே மன்னார் காலத்து கட்டிடக்கலையுடன் கட்டப்பட்ட ஒரு அரண்மனை போன்ற வீட்டை வாங்கியுள்ளார் .
அந்த வகையில் கிட்டத்தட்ட 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டில் மொத்தம் 150 அறைகள் உள்ளதாம் . குறிப்பாக ஒரு ஊரே தங்கும் ;அளவிற்கு எல்லா வசதிகளும் இந்த வீட்டில் உள்ளதாம் . இப்படி இந்த வீடு அரண்மனை போல உள்ளதால் பல படத்தின் படப்பிடிப்புகளும் ,
இங்கு நடந்து வருகிறதாம் . அப்படி அண்மையில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தின் படப்பிடிப்பும் இங்குதான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது …