நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அதற்கான வேலைகளை இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டு வருகிறார் நடிகர் விஜய். மேலும் என்னதான் விஜய்க்கு ஒரு பக்கம் ஆதரவு வந்தாலும் , மறுபக்கம் பல எதிர்ப்புகளும் இருந்து வருகிறது . அந்த வகையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து சராமரியாக பேசியிருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்.
அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான் . அப்படி சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் நடித்திருந்தார் நடிகர் மன்சூர் அலிகான் . இப்படி இருக்கும் நிலையில் விஜய் அரசியல் வருகை,
குறித்து மன்சூர் அலிகான் கூறியதாவது , கொஞ்சம் அரிசி ,காய்கறி ,நோட் புத்தகம் கொடுப்பதற்கு நான் ஒன்றும் அரசியல் கட்சி நடத்தவில்லை. தற்போது விஜய் கோட் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். கோட் என்றால் ஆடு தான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.
அப்படியே பிரியாணி போட்டுவிட்டு போயிட்டே இருப்பேன் . இதோடு நிறுத்தாமல் தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை நான் தடுக்கவே மாட்டேன் , வரவேற்கிறேன் . ஆனால் நான் 40 வருடமாக அரசியலில் இருக்கிறேன் . புதிதாக வரும் நபர்களுடன் என்னை ஒப்பிடாதீங்க என்று ,
பேசி இருந்தார் நடிகர் மன்சூர் அலிகான் . தற்போது இவருடைய சராமரியான பேச்சால் விஜய் ரசிகர்கள் மன்சூர் அலிகான் மீது கோபத்தில் இருந்து வருகின்றனர்…