தமிழ் சினிமாவை பொறுத்தவரை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு . அப்படி எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய விடா முயற்சியின் மூலம் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்தார் விஜயகாந்த் . இப்படி நல்ல நடிகராகவும் , நல்ல மனிதராகவும் இருந்து வந்த விஜயகாந்தின் தம்பி என்று சொல்லி ஒரே நாளில் பிரபலமாகி ,
இருக்கிறார் ஒரு நடிகர் . அவர் வேறு யாரும் இல்லை நடிகர் முரளி தான். கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான பூவிலங்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் முரளி. பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பகல் நிலவு ,கீதாஞ்சலி ,புதுவசந்தம், நம்ம ஊரு பூவாத்தா ,இதயம்,
போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் முரளி . மேலும் இவருடைய முதல் திரைப்படம் தான் பூவிலங்கு. இந்த படம் வெளியான போது இரண்டு, மூன்று நாட்கள் தியேட்டறில் கூட்டமே இல்லையாம் .பின்னர் நான்காவது நாளில் இருந்து,
தான் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் வந்தார்களாம். அதற்கு காரணம் யாரோ முரளியை விஜயகாந்தின் தம்பி என்று புரளி ஒன்றை கிளப்பியுள்ளனர் . குறிப்பாக அப்போது கேப்டனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது . அப்படி இருக்கும்போது அவருடைய தம்பி என்றால்,
சும்மா விடுவார்களா? அதனால் தான் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு ரசிகர்கள் வந்தார்க ளாம் . இதை பேட்டி ஒன்றில் நான் அப்போது விஜயகாந்த் அவர்கள் மாதிரியே இருந்ததால் அப்படி சொன்னார்கள் என்று நடிகர் முரளியே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…