April 26, 2024

மருமகன் மீது இவ்வளவு பாசமா ..?? அயோத்தியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் ..!! தனுஷை விட்டுகொடுக்காத ரஜினி ..!!

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  என்று ஒரு தனி பெயர் இருக்கிறது . மேலும் இவருடைய மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார் . ஆனால் கடந்த 2022 ஆம் வருடம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். என்னதான் விவாகரத்து ஆனாலும் மருமகனை விட்டுக் கொடுக்காமல் இருந்திருக்கிறார் ரஜினி . அந்த வகையில் சமீபத்தில் நடந்த அயோத்தி ராமர் கோவில்,

கும்பாபிஷேகத்துக்கு ரஜினி தனுஷ் இருவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது . இதில் ரஜினி முன் வரிசையில் அமர்ந்திருந்தார் . அப்போது முன்வரிசையில் இன்னும் இரண்டு இடங்களை கேட்டு இருக்கிறார் ரஜினி. அது வேறு யாருக்கும் இல்லை தனுசுக்கும் ,அவருடைய மகனுக்கும் தான் .

ஏனென்றால் முன் வரிசையில் இருக்கும் அனைவருக்கும் பிரதமர் மோடி வணக்கம் செலுத்தி விட்டு போவார் என்பதால் அந்த மரியாதை மருமகனுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார் ரஜினி.  ஆனால் அங்கிருந்த பொறுப்பாளர் அதை நிராகரித்து விட்டாராம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *