April 30, 2024

இந்த காலத்தில் குணத்தை விட ..!! பணத்துக்கு தான் மதிப்பு போல ..!! அஞ்சலியின் மறுமுகத்தை புட்டு புட்டு வைத்த ப்ளாக் பாண்டி ..!!

பிளாக் பாண்டி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட துணை காமெடி நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த பாண்டி கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடித் தெரு என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் . இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாஞ்சா வேலு ,

தெய்வத்திருமகள் ,வேலாயுதம், நீர்ப்பறவை, சாட்டை ,வணக்கம் சென்னை, ஜில்லா, பூஜை போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் பிளாக் பாண்டி . ஆனால் சமீப காலமாக இவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை .

இப்படி  இருக்கும் நிலையில் சமீபத்திய  பேட்டி ஒன்றிய கலந்து கொண்ட பிளாக் பாண்டி நடிகை அஞ்சலி குறித்து கூறியதாவது , நானும் அஞ்சலியும் அங்காடித்தெரு படத்திற்கு முன்பு நல்ல நட்புடன் பழகி வந்தோம் . குறிப்பாக மாறி மாறி இருவரும் கிண்டல் செய்து கொள்வோம்.

ஆனால் அங்காடித்தெரு படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் அஞ்சலியுடன் இணைந்து நடித்திருந்தேன் . ஆனால் அந்த நேரத்தில் அஞ்சலி என்னுடன் பேசவே கிடையாது.  நான் இதைப் பற்றி அவரிடமே கேட்டேன் .

இதற்கு அவர்  ஒன்றுமே சொல்லவில்லை என்று கூறியிருந்தார் . இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த காலத்தில் குணத்தை விட ,பணத்துக்கு தான் மதிப்பு போல என்றும் ,அஞ்சலியும் அப்படிப்பட்டவர் தான் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *