ரச்சிதா மகாலட்சுமி ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார் . கன்னட சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி சீசன் 2 சீரியல் மூலம் தான்.
இந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் ரச்சிதா . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து நாச்சியார்புறம், நாம் இருவர் நமக்கு இருவர் 2 ,இது சொல்ல மறந்த கதை, புது புது அர்த்தங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார். இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே,
சக சீரியல் நடிகரான தினேஷ் கோபால்சாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரச்சிதா .மேலும் திருமணமாகி 10 வருடங்கள் இருவரும் ஒன்றாக இருந்த நிலையில் கடந்த வருடம் இருவரும் பிரிந்து விட்டனர். இதை அடுத்து தனியாக வாழ்ந்து வரும் ரச்சிதா ,
அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணம் செய்யப் போகிறாராம். தற்போது கன்னடத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ரச்சிதா இந்த படத்தை முடித்த கையோடு இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கன்னட இயக்குனர்,
ஒருவரைத் தான் ரச்சிதா திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது . ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…