90 களில் தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இயக்குனரும் , நடிகருமான தியாகராஜனின் ஒரே மகனான பிரசாந்த் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து செம்பருத்தி ,ஆணழகன் ,ஜீன்ஸ் ,ஜோடி ,பார்த்தேன் ரசித்தேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ,
தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். குறிப்பாக அப்போது பிரசாந்துக்கு மிகப்பெரிய பெண் ரசிகை பட்டாளமே இருந்து வந்தது . இப்படி ரசிகர்களின் பேவரைட் நடிகராக கலக்கிக் கொண்டு வந்த பிரசாந்த் ஒரு கட்டத்தில் தேர்வு செய்த படங்கள் எல்லாம் ,
தொடர் தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு சொந்த வாழ்க்கையிலும் ஒரு சில பிரச்சனைகளை சந்தித்த பிரசாந்துக்கு அதன் பிறகு பெரியளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை . இப்படி இருக்கும் நிலையில் பிரசாந்தை நான் தூக்கி விடுகிறேன் என்று வாக்கு கொடுத்துள்ளாராம்,
பிரபல மாஸ் நடிகர் ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகர் விஜய் தான் . தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் . இந்த படத்தில் பிரசாந்துக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இதனால் இந்தத் திரைப்படம் சூப்பர் ஹிட் டானால் பிரசாந்துக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என்று கூறப்படுகிறது . மேலும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…