April 28, 2024

நேரத்துக்கு தகுந்த வேஷம் போடும் சூப்பர் ஸ்டார் ..!! 30 வருடங்களுக்கு முன்பு அயோத்தி குறித்து ..!! ரஜினி என்ன சொன்னார் தெரியுமா ..??

தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதில் இருந்தே பெரிய அளவில் சர்ச்சைகள் கிளம்பி கொண்டு வருகிறது.  இன்னும் சில போனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்று பேட்டி கொடுத்ததால் மேலும் சர்ச்சை கிளம்பியுள்ளது . குறிப்பாக சூப்பர் ஸ்டார் நேரத்துக்கு தகுந்த வேஷம் போடுவதாக ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர் .

அந்த வகையில் 30 வருடங்களுக்கு முன்பே பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது ஏற்பட்ட கலவரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் நடிகர் கமல்ஹாசன் தான் . அப்போது டெல்லியில் இருந்த கமல்ஹாசன் அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை சந்தித்து ,

தன்னுடைய எதிர்ப்பை கூறியிருந்தார்.  ஒரு கோவிலை இடித்து இன்னொரு கோவிலை கட்டுவது நியாயம் கிடையாது என்றும் கூறியிருந்தார்.  குறிப்பாக கமல்ஹாசன் இப்போதும் கூட அதே கருத்தையே தான் சொல்லி வருகிறார் . அதோடு அவர் ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு,

செல்லவே இல்லை . ஆனால் ரஜினி அப்படி கிடையாது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு தான் ரஜினியின் வள்ளி திரைப்படம் வெளியானது . அந்தப் படத்தில் , அயோத்தியில் மட்டும் ராமர் கோவிலும் ,மசூதியையும் கட்டி என்னய்யா பிரயோஜனம்.?  முதலில் ஒவ்வொருவரின் இதயத்தில்,

ராமர் கோவில், மசூதி கட்டி இந்தியன் என்ற உணர்வுடன் வாழுங்கள் என்று கூறியிருப்பார்.  அன்று அப்படிப் பேசிய ரஜினி இன்று அப்படியே மாற்றி பேசியது தான் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *