April 28, 2024

நான் வளர்த்த குழந்தை விஜய்..!! ஆனால் என்னாலையே அவரை பார்க்க முடியவில்லை..!! வருத்தத்தில் கூறிய பிரபல நடிகை ..!!

தற்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு ஒரு தவிர்க்க முடியாத நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய் .சமீப காலமாக இவருடைய நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்து வருகிறது .  அப்படி அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது . இதை அடுத்து தற்போது ,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய் .இப்படி இருக்கும் நிலையில் நான் வளர்த்த குழந்தை விஜய் ஆனால் என்னாலையே அவரை பார்க்க முடியவில்லை என்று வருத்தத்தில் கூறியிருக்கிறார்,

பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஷீலா தான்.  இவர்  நடிகர் விஜய்யின் சித்தியும் , நடிகர் விக்ராந்தின் அம்மாவும் ஆவார் . இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .  மேலும் ஷோபா சந்திரசேகரின் தங்கையான ஷீலா பத்தாம் வகுப்பு,

படிக்கும் போது தான் விஜய் பிறந்தாராம் . இதனால் விஜய்யை  இவர்தான் குளிப்பாட்டி விடுவாராம் . இதனால் இவரோடு மட்டும் தான் விஜய் அதிக நேரம்  இருப்பாராம் . அப்படி நான் வளர்த்த குழந்தை இன்று இவ்வளவு பெரிய இடத்தில் இருப்பது பெருமையாக இருக்கிறது ,

ஆனால் நான் விஜய்யை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது . நான் விஜய்யை ரொம்ப மிஸ் செய்கிறேன் என்று வருத்தத்துடன் கூறியிருந்தார் நடிகை ஷீலா. இதன் பிறகாவது விஜய் இவரை போய் சந்திக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *