May 6, 2024

ஷங்கரால் காணாமல் போன தயாரிப்பாளர் ..!! 9 வருடமாய் சினிமா பக்கமே தலை காட்டாத சோகம் ..!! ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் ..!!

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர் .இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் வாய்ப்பிளக்க வைக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கும் . ஆனால் இதில் ஐடியா மட்டும் தான் ஷங்கர் உடையது,  அதற்கு பட்ஜெட் போடுவது தயாரிப்பாளர்கள் தான் . குறிப்பாக ஷங்கர் படம் என்றாலே படம் ஆரம்பிக்கும் போது ஒரு பட்ஜெட்,

முடியும் போது ஒரு பட்ஜெட் என்றுதான் இருக்கும். அப்படி இயக்குனர் ஷங்கரால் காணாமல் போயிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.  அவர் வேறு யாருமில்லை ஆஸ்கர் பிலிம்ஸ் வி ரவிச்சந்திரன் தான்.  தமிழில் வெளியான வானத்தைப்போல , பூவெல்லாம் உன் வாசம் ,

ஏழுமலை, ஜேஜே, அந்நியன் ,தசாவதாரம் , வாரணம் ஆயிரம் , வேலாயுதம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து இருந்தார்  ரவிச்சந்திரன் . மேலும் இவர் கடைசியாக  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ஐ படத்தை தயாரித்து இருந்தார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தான் இவரை மொத்தமாக காலி செய்து இருக்கிறது என்று கூறப்படுகிறது .  இந்தப் படத்தால் இவருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனால் இந்த படத்திற்கு பிறகு,

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *