கவுண்டமணி ஒரு தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நடிகர் ஆவார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக கலக்கி கொண்டு வந்தார் . அதுவும் இவரும் செந்திலும் , இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது . அப்படி முன்னணி காமெடி நடிகராக கலக்கி கொண்டு,
வந்த கவுண்டமணி ரஜினி ,கமல் ,சத்யராஜ் ,விஜயகாந்த், சரத்குமார் ,விஜய் ,அஜித் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் கவுண்டமணி எல்லா நடிகர்களிடம் சகஜமாகத்தான் பேசுவாராம் . அதுவும் ரஜினி , கமலை கூட வாடா போடா,
என்று தான் அழைப்பாராம் . இதனாலேயே இவர்கள் இருவரும் சங்கடப்பட்டு கவுண்டமணியை தங்களின் படங்களில் நடிக்க விடாமல் செய்தார்களாம். இதன்பிறகு தான் நாளடைவில் கவுண்டமணியும் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது .
இப்படி இருக்கும் நிலையில் முன்னணி நடிகர்களையே வாடா போடா என்று கூப்பிடும் கவுண்டமணி ஒரு நடிகரை மட்டும் மரியாதை கொடுத்து தான் பேசுவாராம் . அவர் வேறு யாருமில்லை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் . இதற்கு காரணம் அவர் மீது ,
பெரிய அளவில் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறாராம் கவுண்டமணி . இதனால் தான் விஜயகாந்துக்கு மட்டும் எப்போதும் ஒரு தனி மரியாதை கொடுப்பாராம். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …