தற்போது மற்ற மாநில நடிகர்களும் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகின்றனர் . அப்படி சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் ஜெயிலர். இந்த படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் கன்னட முன்னணி நடிகரான சிவராஜ்குமார் . கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் மகனான சிவராஜ் குமாருக்கு ,
ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பாக தமிழ் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் . இப்படி மாமனாரோடு நடித்த நடிகர் சிவராஜ்குமார் அவருடைய மருமகனான தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் என்ற படத்தில்,
நடித்து வருகிறார். ஆனால் சூப்பர் ஸ்டார் மாதிரி தனுஷ் கிடையாதாம். அந்த வகையில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வந்து விடுவாராம் நடிகர் சிவராஜ் குமார் . அப்படி தனுசுக்காக படப்பிடிப்பில் ரொம்ப நேரம் காத்திருந்தாராம் நடிகர் சிவராஜ் குமார் . இன்னும் சொல்லப் போனால் தினம்தோறும் ,
தனுஷ் தாமதமாக தான் படப்பிடிப்புக்கு வருவாராம் . அப்படி ஒரு நாள் தாமதமாக வந்தது மட்டுமல்லாமல் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே நடித்துவிட்டு மூடு சரியில்லை என்று கிளம்பி விட்டாராம் நடிகர் தனுஷ் . ஆனால் அங்கு தனுஷுக்காக சிவராஜ்குமார் பலமணி நேரம் காத்துக் கொண்டிருந்தாராம். இப்படி தனுஷ் மரியாதை,
இல்லாமல் நடந்துக்கொண்டது சிவராஜ்குமாருக்கு ஒரு அவமானமாகவே கருதப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் விவாகரத்தான பிறகு நடிகர் தனுஷின் குணமும் மாறிவிட்டது போல என்று ஷாக்கில் கூறி வருகின்றனர் …