April 25, 2024

சோபா தம்பிக்கு வாய்ப்பு கொடுத்த சூப்பர் ஸ்டார் இயக்குனர் ..!! 13 வயதிலேயே அடித்த ஜாக்பாட் ..!! வாழ்த்து சொல்லும் ரசிகர்கள் ..!!

இப்போதுள்ள குழந்தைகள் எல்லாம் மிகவும் விவரமாகவும்,  பேச்சில் பெரியவர்களையே மிஞ்சும் அளவிற்கு இருந்து வருகின்றனர். குறிப்பாக அதை தான் பலரும் ரசிக்கிறார்கள் .  அந்த வகையில் பலபேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் 13 வயதான முகமத் ரசூல் . இந்த சிறுவனை தெரியாத தமிழ் மக்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் உடல் மண்ணுக்கு உயிர் சோபாவுக்கு என்ற வசனத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் ரசூல் . சோபா கடை வைத்திருக்கும் அப்பாவுக்காக உதவி செய்ய வந்த ரசூல் பின்னர் நாளாக நாளாக அப்பாவின் வியாபாரத்தை தூக்கி நிறுத்தியது மட்டுமில்லாமல் ,

தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமும் ஆனார் ரசூல் . இதனால் இவருக்கு தற்போது படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளதாம். அந்த வகையில் ஜெயிலர் படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறாராம்,

சோபாபாய் ரசூல் . அதுமட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் . இப்படி 13 வயதிலேயே இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதால் வருங்காலத்தில் இவர் பெரிய ஆளாக வருவார் என்று பலரும் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *