தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா . கடந்த 2010 வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சமந்தா. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நான் நீதானே என் பொன் வசந்தம்,அஞ்சான், கத்தி, தங்க மகன், பத்து என்றதுக்குள்ள ,தெறி, 24 போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து,
தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை ,
காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா . ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை வெறும் நான்கு வருடங்கள் மட்டுமே நீடித்தது இதன் பிறகு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வந்தார்.
பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பூக்களை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ,அதனால் எனக்கு அலர்ஜி வந்துவிட்டது . இதனால் எமர்ஜென்சி பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்,
என்று சமந்தாவே தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் கூறியிருக்கிறார் . இதைப் பார்த்த ரசிகர்கள் பூவை பார்த்தாலும் கூட அலர்ஜியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…
View this post on Instagram