சினிமாவைப் பொறுத்தவரை ஒரு சில ஹீரோக்களுடன் முக்கிய இயக்குனர்கள் இணையும்போது ரசிகர்களுக்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வரும் . அப்படி கடந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூட்டணியில் ஒன்று தான் வெற்றிமாறன்- சூர்யா கூட்டணி. அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ஒரு தரமான இயக்குனராக இருந்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் கடந்த வருடம் சூர்யாவை வைத்து,
வாடிவாசல் என்ற படத்தை தொடங்கினார். இந்தப் படத்திற்கான ஒத்திகை கூட நடந்து முடிந்தது . இதனால் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தகவல் வெளியானது . இதனால் இந்த படத்திற்காக சூர்யாவின் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ,
காத்துக் கொண்டிருந்தனர் . ஆனால் தற்போது வாடிவாசல் படத்தில் நடிக்கப் போவது அஜித் என்று தகவல் வெளியாகியுள்ளது. காரணம் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பெரிய அளவில் போய்க்கொண்டிருக்கும் பஞ்சாயத்து தான் அமீரின் பருத்திவீரன் பஞ்சாயத்து.
இதில் அமீரை ஒரு குற்றவாளி போல சித்தரித்து வந்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஆனால் இது குறித்து சூர்யா கார்த்தி வாய் திறக்காமல் இருந்து வந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது . அது மட்டுமல்லாமல் வாடிவாசல் படத்தில் அமீருக்கு ஒரு முக்கிய,
கதாபாத்திரம் உள்ளதாம் .இதனால் சூர்யாவுக்கும் , அமீருக்கும் இருக்கும் பிரச்சனையால் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. அதனால் இந்த படத்தில் அஜித் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது . இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது…