தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருந்து நயன்தாரா இதுவரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார் . இதை அடுத்து கடந்த ஏழு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா கடந்த வருடம் அவரையே கரம் பிடித்தார். இப்படி திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் ,
இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா. இந்த விஷயம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . அப்படி இருந்தும் நயன்தாரா இந்த விஷயத்தை சட்ட ரீதியாக எதிர்கொண்டார் நயன்தாரா . இப்படி இருக்கும் நிலையில் குழந்தை பிறந்து பல,
மாதங்களாக வெளியில் காட்டாமல் இருந்து வந்த நயன்தாரா சமீபத்தில் தன்னுடைய குழந்தைகளின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டி இருந்தார். இந்நிலையில் அந்தப் புகைப்படத்தை பார்த்து பிக் பாஸ் பிரபலம் போட்ட பதிவுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . அந்த வகையில் ,
பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்துகொண்டு தன்னுடைய லீலைகளால் சர்ச்சையை கிளப்பிய பிரபலம் தான் பாடகர் அசல் கோளாறு . இப்படி இருக்கும் நிலையில் இவர் நயன்தாராவின் மகன்களின் புகைப்படத்தை பார்த்துவிட்டு ” அந்தக் குழந்தைகள் தங்கள் அம்மா யார் என்பதை ,
விரைவில் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று கமெண்ட் போட்டு இருக்கிறார் . இதை பார்த்த ரசிகர்கள் என்ன தான் நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாலும் , இப்படி எல்லாம் கேட்டிருக்கக் கூடாது என்று அசல் கோளாறை கழுவி ஊற்றி வருகின்றனர்…