தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் அனிருத் . ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளராக மாறினார் அனிருத் . இன்னும் சொல்லப்போனால்,
தமிழ் சினிமாவில் இருக்கும் இசையமைப்பாளர்களிலேயே ரொம்ப பிசியாக இருக்கும் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான் . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினராக இருந்து வரும் அனிருத்தை சூப்பர் ஸ்டாரின் மகள்கள் புறக்கணித்து வருவதாக,
தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ராகவா லாரன்ஸை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம் . இந்த படத்திற்காக ஏ ஆர் ரகுமான் , ஜிவி பிரகாஷ் குமார் போன்றவர்களிடம் பேச்சுவார்த்தை ,
நடத்தி வருகிறார்களாம் . ஆனால் இவர்களுடைய குடும்பத்தில் இருக்கும் அனிருத்தை சௌந்தர்யா, ஐஸ்வர்யா இருவருமே கண்டு கொள்ளவில்லையாம். அதற்கு காரணம் என்னவென்றால், சமீப காலமாக அனிருத்தின் நடவடிக்கை சரியில்லையாம். ரொம்ப தலைக்கனத்துடன்,
இருந்து வருகிறாராம் . இதனால்தான் லால் சலாம் படத்திற்கு ஐஸ்வர்யா அனிருத்துக்கு பதிலாக ஏ ஆர் ரகுமானை இசையமைப்பாளராக போட்டதாக கூறப்படுகிறது. இதனால் அக்காவை போலவே தங்கையும் இதே முடிவையே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…