விஜய் தொலைக்காட்சியை கலக்கி வரும் தவிர்க்க முடியாத பிரபலங்களில் ஒருவர் தான் கே பி ஒய் பாலா. ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாலா பின்னர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தார் . இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அந்த வகையில் தமிழில் வெளியான பல திரைப்படங்களில்,
காமெடி வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் பாலா . மேலும் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் போதே பாலா செய்து வரும் உதவிகள் அனைத்தும் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறது . அந்த வகையில் ஏற்கனவே கஷ்டப்படும் மக்களுக்காக மூன்று இலவச ஆம்புலன்ஸ்,
வாங்கி கொடுத்திருந்தார் பாலா . அது மட்டுமல்லாமல் சென்னை, தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் கஷ்டப்பட்டபோது அவருக்கு நேரில் சென்று உதவி இருந்தார். இதை அடுத்து தற்போது அடுத்ததாக இன்னொரு சேவையை தொடங்கி வைத்துள்ளார் பாலா. அந்த வகையில் இலவச ஆட்டோ ஒன்றை ,
தொடங்கி வைத்துள்ளார் பாலா . அதற்கு காரணம் என்னவென்றால் முதியோர்கள் , மாற்றத்திறனாளிகள் மருத்துவமனைக்கு செல்லும் போது ஆட்டோ சேவை தேவைப்படுகிறதாம் . ஆனால் அவர்களிடம் அதற்கான பணம் இல்லாததால் தற்போது 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ,
இலவச ஆட்டோ சேவை ஒன்றை தொடங்கி வைத்துள்ளார் . அப்படி ஆட்டோ சேவை தேவைப்படும் மக்கள் அந்த நம்பருக்கு அழைத்தால் உடனே வந்து விடுவார்களாம். இதை பார்த்த ரசிகர்கள் பாலாவுக்கு உதவி செய்யலைனா தூக்கமே வராது போல என்று கூறி வருகின்றனர்…