அருண் விஜய் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . மூத்த நடிகரான விஜயகுமாரின் மகனான அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த,
அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது . இதன்பிறகு இவர் நடித்த குற்றம் 23 ,செக்க சிவந்த வானம் , தடம் , யானை போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது வணங்கான் என்ற படத்தில் நடித்துக் கொண்டு,
வருகிறார் நடிகர் அருண் விஜய் . இப்படி இருக்கும் நிலையில் அம்மா சொன்ன ஒரு வார்த்தைக்காக காதலே வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டாராம் நடிகர் அருண் விஜய் . அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அருண் விஜய்யிடம் திருமணத்துக்கு முன்பு,
உங்களுக்கு காதல் இருந்ததா என்று கேட்டுள்ளனர் . அதற்கு அருண் விஜய் கூறியதாவது, நான் படிக்கும்போதே என்னுடைய அம்மா எனது ஜாதகத்தை பார்த்துவிட்டு , நீ எந்தப் பெண்ணையாவது காதலித்தால் கண்டிப்பாக அடிதடி , போலீஸ் போன்ற பிரச்சனைகள் வரும்,
என்று கூறினார் . அப்பவே எனக்கு காதல் என்றாலே அம்மா சொன்னது தான் ஞாபகத்துக்கு வரும். அதனாலயே நான் யாரையும் காதலிக்காமல் அப்பா அம்மா பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார் நடிகர் அருண் விஜய் …