May 2, 2024

கட்டுனா ஸ்ரீ தேவியை கட்டுவேன் ..!! ஒற்றைக்காலில் நின்ற சூப்பர் ஸ்டார் ..!! காதலை சொல்லும் போது ஏற்பட்ட விபரீதம் ..??

கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  இதனிடையே லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட ரஜினிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . ஆனால் முதலில் நடிகை ஸ்ரீதேவியை தான் கல்யாணம் பண்ண நினைத்தாராம் ரஜினி . அந்த வகையில் ஸ்ரீ தேவியும் , ரஜினியும் இணைந்து ,

அபூர்வ ராகங்கள் , 16 வயதினிலே, மூன்று முடிச்சு ,அடுத்த வாரிசு ,நான் அடிமை இல்லை, ஜானி, தனி காட்டு ராஜா, போக்கிரி ராஜா போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . இதனால் அப்போதே இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கிசுகிசுகள் எழுந்தது.

ஆனால் அதை உண்மையாகினார் ரஜினி. அதுமட்டுமில்லாமல் ஸ்ரீதேவியின் குடும்பத்தினருடனும் நல்ல நட்புடன் பழகி வந்திருக்கிறார் ரஜினி . இதனால் கட்டினால் ஸ்ரீதேவியை தான் கட்டுவேன் என்று முடிவெடுத்து அவருடைய வீட்டிற்கு பெண் கேட்க போயிருக்கிறார் .

அப்போது ஸ்ரீதேவியின் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததாம் . அப்போது தன்னுடைய காதலை கூறலாம் என்று முடிவு செய்து இருக்கிறார் ரஜினி. ஆனால் திடீரென ஸ்ரீதேவியின் வீட்டில் கரண்ட் கட் ஆகிவிட்டதாம் . இதனால் நேரமே சரியில்லை என்று நினைத்து ,

அப்படியே வீடு திரும்பி விட்டாராம் ரஜினி.  இதன் பிறகு தான் லதாவை திருமணம் செய்து கொண்டார் சூப்பர் ஸ்டார் . இப்படி இருக்கும் நிலையில் ரஜினியும் , ஸ்ரீதேவியும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *