May 6, 2024

அவர் தலைமையில் மகனின் கல்யாணத்தை நடத்தணும் ..!! ரொம்ப ஆசைப்பட்ட விஜயகாந்த் ..!! நிச்சயதார்த்தோடு நின்று போன திருமணம் ..!!

கேப்டன் விஜயகாந்தின் திடீர் மரணம் ரசிகர்கள் உட்பட பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் 71 வயதில் இறந்த கேப்டன் விஜயகாந்துக்கு அந்த ஒரு ஆசை மட்டும் நிறைவேறாமலேயே போய்விட்டதாம் . அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருமணமாகி விஜய பிரபாகரன்,  சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் .

அதில் சண்முக பாண்டியன் மட்டும் அவ்வப்போது சினிமாவில் தலை காட்டி வருகிறார்.  மூத்த மகன் சொந்தமாக தொழில் செய்வதாக தகவல் வெளியானது . மேலும் சிங்கம் போல இரண்டு மகன்கள் இருந்தும் அவர்களுடைய திருமணத்தை பார்க்காமலேயே இறந்து விட்டார் விஜயகாந்த் .

ஆனால் விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரனுக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது . இப்படி நிச்சயதார்த்தம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகியும் திருமணம் மட்டும் ,

நடக்கவில்லையாம்.  அதற்கு காரணம் விஜயகாந்த் தன்னுடைய மகனின் திருமணத்தை மோடியின் தலைமையில் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.  இப்படி காத்துக்கொண்டிருக்கும் போதே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ,

அவருடைய மகனின் திருமணம் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது . இருந்தாலும் மகனின் திருமணத்தை பார்த்து இருந்தால் விஜயகாந்த் இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பார் என்று பலரும் கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *