தற்போது இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் அட்லீ . ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் அட்லீ . பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ .இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்தார் இயக்குனர் அட்லீ . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,
விஜய்யை வைத்து தெறி ,மெர்சல் ,பிகில் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் அட்லீ . இதன் மூலம் இவருக்கு ஷாருக்கானை வைத்து இயக்கும் வாய்ப்பு அமைந்தது . அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான,
ஜவான் படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் அட்லீ . இந்தத் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது. குறிப்பாக ஒரு தமிழ் இயக்குனரின் திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்தது இதுவே முதல் முறையாகும் .
இதனால் தற்போது இயக்குனர் அட்லீக்கு இந்திய அளவில் பெரிய கௌரவம் கிடைத்திருக்கிறது . அது என்னவென்றால் 2023 இல் இந்திய அளவில் அதிகம் பாப்புலரான படம் என்ற பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது அட்லீயின் ஜவான் திரைப்படம்.
அதற்காக ஐ எம் டி பி அட்லியை கௌரவப்படுத்தி இருக்கிறது அந்த புகைப்படத்தை தற்போது உருக்கமான பதிவு போட்டு வெளியிட்டுள்ளார் இயக்குனர் அட்லீ …
View this post on Instagram