தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார். இதனிடையே கடந்த 1999 ஆம் ஆண்டு தன்னுடைய தீவிர ரசிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஜய் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன்,
ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் திருமணத்திற்கு முன்பே சங்கீதா வேறொரு நடிகரை காதலித்ததாக பரபரப்பை கிளப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் ஜெய் ஆகாஷ் தான். கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ரோஜாவனம் என்ற படத்தின்,
மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் ஜெய் ஆகாஷ். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரோஜா கூட்டம், இனிது இனிது காதல் இனிது ,அமுதே காற்றுள்ள வரை, வந்தே மாதரம் ,ஆயுதப் போராட்டம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . ஆனால் இவர் நடித்த படங்கள் ,
பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஜெய் ஆகாஷின் படத்தின் மேடையில் பேசிய பயில்வான் ரங்கநாதன் ஜெய் ஆகாஷை ரசிகை ஒருவர் லண்டனில் சந்தித்து காதலித்து வந்திருக்கிறார். இதன் பிறகு அந்த ரசிகை இவரை விட்டு விட்டு,
இன்னொரு நடிகரை திருமணம் செய்து கொண்டார் என்று கூறியிருந்தார் . அது வேறு யாருமில்லை நடிகர் விஜய்யின் மனைவி தான் . குறிப்பாக அந்த கிசுகிசுவை எழுதியதே நான்தான் என்று மேடையிலேயே கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்…