சதா ஓர் பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை சதா . பின்னர் அடுத்த ஆண்டே ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமானார் நடிகை சதா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிரி ,வர்ணஜாலம், அந்நியன், திருப்பதி ,
உன்னாலே உன்னாலே , புலி வேஷம் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சதா. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருந்தார் நடிகை சதா . அந்த வகையில் இவர் அறிமுகமான ஜெயம் படத்தில் வில்லனாக நடிகர் கோபிசந்த் நடித்திருந்தார் . அப்போது இவருடைய கன்னத்தில் கோபிசந்த் நாக்கால்,
நக்குவது போல ஒரு காட்சி இருந்திருக்கிறது . ஆனால் நடிகை சதா இப்படி ஒரு காட்சியில் நடிக்கவே முடியாது என்று உறுதியாக கூறிவிட்டாராம். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் இந்த காட்சி வேண்டும் என்று நடிகை சதாவை கட்டாயப்படுத்தினாராம் . இதன் பிறகு வேண்டா வெறுப்பாக ,
அந்த காட்சியில் நடித்த சதா வீட்டிற்கு சென்ற பிறகு கதறி கதறி அழுதாராம் . இதுதான் என்னுடைய வாழ்க்கையிலேயே நடந்த கசப்பான அனுபவம் என்று வேதனையில் கூறியிருந்தார் நடிகை சதா…