April 26, 2024

அந்த காட்சியில் நடித்து விட்டு ..!! வீட்டிற்கு வந்ததும் இதை தான் செய்தேன் ..!! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ஜெயம் பட நடிகை ..!!

சதா ஓர் பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற தெலுங்கு படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானார் நடிகை  சதா . பின்னர் அடுத்த ஆண்டே  ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமானார் நடிகை  சதா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிரி ,வர்ணஜாலம், அந்நியன், திருப்பதி ,

உன்னாலே உன்னாலே , புலி வேஷம் போன்ற பல தமிழ்  திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சதா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருந்தார் நடிகை சதா . அந்த வகையில் இவர் அறிமுகமான ஜெயம் படத்தில் வில்லனாக நடிகர் கோபிசந்த்  நடித்திருந்தார் . அப்போது இவருடைய கன்னத்தில் கோபிசந்த்  நாக்கால்,

நக்குவது போல ஒரு காட்சி இருந்திருக்கிறது . ஆனால் நடிகை சதா இப்படி ஒரு காட்சியில் நடிக்கவே முடியாது என்று உறுதியாக கூறிவிட்டாராம்.  ஆனால் அந்த படத்தின் இயக்குனர் இந்த காட்சி வேண்டும் என்று நடிகை சதாவை  கட்டாயப்படுத்தினாராம் . இதன் பிறகு வேண்டா வெறுப்பாக ,

அந்த காட்சியில் நடித்த சதா வீட்டிற்கு சென்ற பிறகு கதறி கதறி அழுதாராம் .  இதுதான் என்னுடைய வாழ்க்கையிலேயே  நடந்த கசப்பான அனுபவம் என்று வேதனையில் கூறியிருந்தார் நடிகை சதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *