ஒரு காலகட்டத்தில் சினிமாவில் வில்லன் என்றாலே கரடு முரடான குரல், கட்டுமஸ்தான உடம்பு போன்ற பல விஷயங்கள் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் ஒன்று இருந்து வந்தது. ஆனால் அதை எல்லாம் தகர்த்தெறிந்தவர் தான் நடிகர் ரகுவரன் . இவருடைய உருவத்திற்கும் நடிப்பிற்கும் சம்பந்தமே இருக்காது. அந்த அளவிற்கு ஒரு நடிப்பு அரக்கனாகவே வாழ்ந்து வந்தார் ரகுவரன் .
அதுவும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய உடல் மொழியையும், குரலையும் மாற்றி நடிக்க கூடியவர் ரகுவரன் . தற்போது அவர் இறந்துவிட்டாலும் தமிழ் சினிமாவிற்கு இன்னொரு ரகுவரன் கிடைத்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை ,
மலையாள நடிகரான பகத் பாசில் தான் . மலையாள திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் ,விக்ரம் ,சமீபத்தில் வெளியான மாமன்னன்,
போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நடிகர் பகத் பாசில் . குறிப்பாக இவரும் நடிகர் ரகுவரனை போல ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய உடல் மொழியையும் , குரலையும் மாற்றித் தான் நடிப்பாராம். அப்படி அந்த படத்தில் நடித்த சாயில் வேறு எந்த படத்திலும் இருக்கக் கூடாது ,
என்று நினைப்பாராம்.இதனாலேயே இவர் மலையாளம் மொழி மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் கலக்கி கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக விக்ரம் படத்தில் நடிக்கும் போது கமல்ஹாசனே அவருடைய நடிப்பை பார்த்து மிரண்டு விட்டதாகவும் கூறி இருந்தார்…