தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களுக்கும் இயக்குனர் மணிரத்னத்துடன் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் 58 வயதாகியும் கூட இயக்குனர் மணிரத்னத்துடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்று கெஞ்சி கேட்டு இருக்கிறார் ஒரு நடிகர் . அவர் வேறு யாருமில்லை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தான் . அந்த வகையில் பாலிவுட் திரை உலகில் ஒரு முன்னணி நடிகராக ,
கொடிகட்டி பறந்து வரும் ஷாருக்கான் இது வரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . மேலும் கடந்த 1998 ம் ஆண்டு ஷாருக்கானை வைத்து உயிரே என்ற படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் மணிரத்னம். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல்,
தமிழ் மக்கள் மத்தியில் ஷாருக்கானுக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது . ஆனால் இதன் பிறகு இவர்கள் இருவரும் இணையவில்லை. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கானும் , மணிரத்னமும் ஒன்றாக கலந்து கொண்டனர் . அப்போது பேசிய ஷாருக்கான் ,
மணிரத்னம் சார் , உங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் , நான் இதை உங்களிடம் கேட்டு விடுகிறேன் . இப்போது எல்லார் முன்னாடியும் உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன் என்னுடன் தயவு செய்து ஒரு படம் பண்ணுங்க, அதற்காக நான் விமானத்தில் மீது ஏறி நின்று கூட ,
“தைய தையா ” என்று ஆடுகிறேன், ப்ளீஸ் மணி சார் என்று கெஞ்சி கேட்டு இருந்தார் ஷாருக்கான் . மேலும் ஒரு டாப் நடிகரே இப்படி கேட்டுக்கொண்டதால் மணிரத்னம் இவருடன் பணிபுரிவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…