தமிழ் சினிமா உலகில் ஒரு நடிகையாகவும் , அரசியல்வாதியாகவும் கலக்கிக்கொண்டு வருபவர் நடிகை குஷ்பூ . தமிழில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான குஷ்பூ குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனரும் ,நடிகருமான சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ,
நடிகை குஷ்பூ. குறிப்பாக திருமணத்திற்கு பிறகு அரசியலில் களமிறங்கி விட்டார் நடிகை குஷ்பூ . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்றும் மோடி ஆட்சியில் ராமரை பார்க்க போகிறோம் என்பது பெருமையாக உள்ளது என்று,
பேசியிருந்தார் . அது மட்டுமல்லாமல் அண்மைக்காலமாக இந்து கடவுளை வணங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை குஷ்பூ. இந்நிலையில் இவருடைய பழைய பதிவு ஒன்று தீயாய் பரவி வருகிறது . அதில் நான் முஸ்லிமாக பிறந்தேன் , முஸ்லிமாக தான் இறப்பேன்,
என்னுடைய மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் . அதை ரசிகர் ஒருவர் பகிர்ந்து இருந்தார். தற்போது அதற்கு விளக்கம் கொடுத்த குஷ்பூ நான் சாகும்வரை முஸ்லிம் தான், நான் மதம் மாறவில்லை ,மதமும் மாற மாட்டேன் உங்களைப் பொறுத்தவரை ,
ஆன்மிகம் என்பது மதம் சார்ந்தது. ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒரு உரிமை பாடு பற்றியது , நான் கடவுளை ஒருவர் என்று நம்புகிறேன் அதனால் தான் எல்லா கடவுளையும் கும்பிடுகிறேன் என்று கூறியிருந்தார்…
I will still die as a muslim brother. I haven’t changed my religion. Nor ever will. For some, like you, devotion is related to religion. To me, it’s about oneness. I believe God is one. #Ram is worshipped by all. Broaden your thoughts, you will feel better. #JaiShriRam 🙏🙏😊 https://t.co/Go2VXA9XvT
— KhushbuSundar (@khushsundar) January 22, 2024