தமிழ் சினிமா உலகில் ஒரு நடிகராகவும் , நடிகர் சங்க முக்கிய பொறுப்பாளராகவும் இருந்து வருபவர் நடிகர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய விஷால் தொடர்ந்து திமிரு ,சண்டக்கோழி ,தாமிரபரணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இதன் பிறகு நடிகர் சங்கத் தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார் விஷால்.
இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த 28 ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் . அப்படி கேப்டன் இறந்தபோது வெளிநாட்டிலிருந்து இருக்கிறார் விஷால். அப்படி அவர் இறந்த அன்றைக்கு எனக்கு அவருடைய முகத்தை பார்க்க கொடுத்து வைக்கவில்லை,
என்று அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் நடிகர் விஷால் . இப்படி இருக்கும் நிலையில் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு திரும்பிய விஷால் முதல் வேலையாக கேப்டனின் நினைவிடத்திற்கு வந்திருக்கிறார். அப்படி வந்தவர் அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு,
என்னை மன்னிச்சிடு விஜயகாந்த் சாமி என்று பேசியிருந்தார். அது மட்டுமல்லாமல் நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்தின் பெயரையே வைக்க உள்ளதாகவும் கூறியிருந்தார் . இதன் பிறகு அங்கிருந்த ரசிகர்களுக்கெல்லாம் கேப்டன் விஜயகாந்தை போலவே அன்னதானம்,
வழங்கி இருந்தார் விஷால் .இதைப் பார்த்த பலரும் விஷால் உடம்பில் கேப்டன் இறங்கி விட்டாரா என்று நெகிழ்ச்சியில் கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…