தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக இருந்து வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படி நல்ல பெயருடன் இருந்து வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் ஒரே நாளில் மாறிப்போனது தான் ரசிகர்களை பரபரப்பாகியுள்ளது . அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான,
மனம் கொத்திப்பறவை , வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினிமுருகன் , நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தவர் டி இமான். இதனால் இருவரும் அண்ணன் தம்பி போல பழகி வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி,
ஒன்றில் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் . இதனால் அவருடன் நான் எப்போதும் பணிபுரிய மாட்டேன் என்று கூறியிருந்தார் டி இமான் . இந்த பஞ்சாயத்து தான் கடந்த சில வாரங்களாக இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .
குறிப்பாக சிவகார்த்திகேயன் இப்படியெல்லாம் பண்ணி இருப்பாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் கேள்வி எழுப்பி வந்தனர் . இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி இமான் கூறியதாவது, இறைவன் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் .
எது சரி எது தவறு என்று அவருக்கு நன்றாகவே தெரியும் . இதனால் இதற்கெல்லாம் அவரே முற்றுப்புள்ளி வைப்பார் என்று ஒரே வார்த்தையில் முடித்திருந்தார் டி இமான்…