தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் தரமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் தனுஷ் . இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கு என ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் தனுஷ் . அது மட்டுமல்லாமல் சிறந்த நடிகருக்கான,
தேசிய விருதை இரண்டு முறை வென்றிருக்கிறார் நடிகர் தனுஷ் . இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட தனுசுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஐஸ்வர்யாவும் , தனுஷும் ஒன்றாக தான்,
வாழ்ந்து வந்தனர். ஆனால் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை திடீரென கடந்த வருடம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் 120 கோடி போட்டு போய்ஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு கட்டியிருந்தார் நடிகர் தனுஷ் .
அப்படி அத்தனை கோடி போட்டு வீடு கட்டியும் நிம்மதி இல்லாமல் இருக்கிறாராம் தனுஷ். அதற்கு காரணம் அரண்மனை போல் இருக்கும் வீட்டில் மனைவி மற்றும் மகன்கள் இல்லாதது தனுசுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாம். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு,
ஆளான தனுஷ் தற்போது படப்பிடிப்பில் கோபமாகவும் நடந்து கொள்கிறாராம் . அதோடு கூட நடிக்கும் நடிகர்களையும் தனுஷ் மதிக்க மாட்டேங்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது…