April 30, 2024

மாயாவை ஜெயிக்க வைப்பதற்கு நடக்கும் பித்தலாட்டம் ..!! மாமா டிவி என்று கழுவி ஊத்தும் ரசிகர்கள் ..!!

தமிழ் ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.  இதை அடுத்து ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.  மேலும் இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  இதில் வைல்டு  கார்டு போட்டியாளராக சீரியல் நடிகை அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார் .

ஆரம்பத்தில் அழுமூஞ்சி என்ற பெயரெடுத்த அர்ச்சனா போகப் போக சக போட்டியாளர்களையே அலற வைத்தார்.  மேலும் பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்காத போட்டியாளர்கள் என்றால் அது மாயா தான் . ஆரம்பத்திலிருந்தே  இவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும்,

ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறது .  இவரெல்லாம் எப்போவோ  எலிவேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு இருப்பார். ஆனால் தொடர்ந்து விஜய் டிவி இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது . இதையடுத்து 99 நாளை எட்டியுள்ள பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு ,மாயா, விஜய் வர்மா, மணி, தினேஷ் ,

அர்ச்சனா ஆகிய ஆறு பேர்தான் உள்ளனர் . இதில் கண்டிப்பாக அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் இப்போது மாயாவை ஜெயிக்க வைப்பதற்காக பல்வேறு சதிகள் நடந்து வருகிறதாம் . குறிப்பா மிஸ்டு கால் மூலமாகவும் வாக்களிக்கலாம் என்று,

ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனிநபர் அறிவித்திருந்தது விஜய் டிவி.  ஆனால் அர்ச்சனாவுக்கு மட்டும் மிஸ்டு கால் போகவில்லையாம்.  இதனால் போன முறை எப்படி அசீம்மை ஜெயிக்க வைத்தார்களோ,  அதே போல இந்த முறை மாயாவை ஜெயிக்க வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *