April 22, 2024

கேப்டன் சமாதியில் அருண்விஜய் எடுத்த சபதம் ..!! அவர் விட்டதை நான் தொடர போகிறேன்..!! அருண்விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள் ..!!

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இருக்கும் வரை பல பேருக்கு உதவி செய்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தார் ஒன்றுதான். என்னதான் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையாக விஜயகாந்த் பிறந்தாலும் சென்னைக்கு வந்தபோது ஒருவேளை சோற்றுக்கு மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் . அது மட்டுமல்லாமல் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது,

ஹீரோயின் வந்துவிட்டார் என்றதும் உடனே அவரை வரச் சொல்லிவிட்டார்களாம்.  இப்படி ஒரு வேளை சாப்பாடு கூட ஒழுங்காக சாப்பிட முடியவில்லை என்று அப்போது ரொம்ப வருத்தப்பட்டு இருக்கிறார் . அதன் பிறகு சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய விஜயகாந்த்,

நான் என்ன சாப்பிடுகிறானோ , அதைத்தான் படக்குழுவினர்கள் அனைவரும் சாப்பிட வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார் . இன்னும் சொல்லப்போனால் முதல் முதலாக பட குழுவினர்கள் அனைவருக்கும் இலை போட்டு சாப்பாடு போட்டது விஜயகாந்த் மட்டும்தான்.  இதனாலேயே  விஜயகாந்த் ,

உடன் பணியாற்றிய பல பிரபலங்கள் இப்போதும் அவரை ஒரு கடவுளாக பார்க்கிறார்கள் . இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திய அருண் விஜய் சபதம் ஒன்றையும் எடுத்திருக்கிறார் . அதில் அவர் கூறியதாவது, இனி என்னுடைய படப்பிடிப்பு,

தளத்தில் அனைவருக்கும் ஒரே சாப்பாடு தான் என்றும் , கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விட்டதை நான் தொடர போகிறேன் என்றும் சபதம் எடுத்துள்ளார் அருண் விஜய் . மேலும் இவரைப் போன்றே மற்ற நடிகர்களும் செய்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *