April 28, 2024

உயர்ந்த மனிதன் என்று நிரூபித்த சூப்பர் ஸ்டார்..!! விஜய்யை பற்றி என்ன சொன்னார் தெரியுமா ..?? காக்கா கழுகு கதைக்கெல்லாம் முற்றுப்புள்ளி ..!!

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காக்கா கழுகு கதை சொல்லியிருந்தார் . இந்த கதையில் விஜய்யை தான் காக்காவாக சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் அப்போது கொந்தளித்தார்கள் . அது மட்டுமல்லாமல் லியோ படத்தின் வெற்றி விழாவின்போதும் இந்த சர்ச்சை ஏற்பட்டது . இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக,

வெளியாக உள்ள திரைப்படம் தான் லால் சலாம் . இந்த படத்தில் இவருடன் இணைந்து விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.  அந்த விழாவில் காக்கா- கழுகு கதைக்கு மொத்தமாக ,

முற்றுப்புள்ளி வைத்திருந்தார் ரஜினிகாந்த் . அதில் அவர் கூறியதாவது , நான் காக்கா கழுகு கதையை விஜய்யை குறிப்பிட்டு சொல்லவில்லை .ஆனால் நான் விஜய்யை தான் காக்கா என்று சொன்னதாக பலரும் பேசினார்கள் . அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது . மேலும் விஜய் நான் பார்த்து,

வளர்ந்த பையன் .அவருடைய திறமையாலும் உழைப்பாலும் இன்று ஒரு முன்னணி நடிகராக இருக்கிறார் . அடுத்ததாக அரசியல் மற்றும் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் . இப்படி இருக்கும்போது விஜய்யை எனக்கு போட்டின்னு சொல்வதை பார்க்கும் போது எனக்கு கஷ்டமாக இருக்கு .

தயவுசெய்து எங்க ரெண்டு பேரோட ரசிகர்களும் தேவையில்லாமல் சண்டை போடாதீங்க . இதுதான் என்னுடைய அன்பார்ந்த வேண்டுகோள் என்று  பேசியிருந்தார் ரஜினிகாந்த் . இதைப் பார்த்த ரசிகர்கள் உயர்ந்த மனிதன் என்று சூப்பர் ஸ்டார் மீண்டும் நிரூபித்து விட்டார் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *